புதுடெல்லி: கேரளாவில் 2018-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குருவாயூர் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியது சட்டவிரோதம் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கோயில் நிதியை வழங்கியது சட்ட விரோதமானது என கடந்த 2020-ல் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கில், உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்க கோயில் நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை என மறு ஆய்வு அமர்வு கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil