https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/11/large/988592.jpgஉலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அக். 15-ல் மோத வாய்ப்பு

சென்னை: ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்தும் மோதக்கூடும்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டங்கள் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வகையில் சென்னைக்கு கூடுதல் ஆட்டங்களை நடத்த வாய்ப்பு கிடைக்கக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post