சின்னமனூர்: வெளிமாநிலங்களில் இருந்து தேனி வழியே சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்துள்ளன. இவர்களுக்காக தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் தகவல் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரளாவின் குளிர் பருவநிலை, பசுமை பள்ளத்தாக்கு, படகுகள் இயக்கம் போன்றவற்றிற்காக ஏராளமான சுற்றுலா பணிகள் தேனி வழியே கேரளா செல்வது வழக்கம். இந்த வாகனங்கள் அனைத்தும் தேனி மாவட்டத்தின் புறவழிச்சாலை வழியே கடந்து செல்கின்றன. இதனால் இப்பகுதி மோட்டல்கள், ஓட்டல்கள், பேக்கரி, பழ விற்பனையகம் நிறைந்த வர்த்தக பகுதியாக மாறிவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil