நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியின் பட்டியலிலிருந்து வெளியேற்றி உள்ளது பாகிஸ்தான்.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். அதன் காரணமாக 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags
Cinema
Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Latest Tamil News India & World
இந்து தமிழ் திசை : News in Tamil