“கணவன் என்ன செய்தாலும் மனைவி பின்பற்ற வேண்டும் என்பதில்லை” - அமரிந்தர் சிங் https://ift.tt/EAf9TOI

பஞ்சாப்: தனது மனைவி பாஜகவில் இணைவாரா என்ற கேள்விக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் பதில் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் நேற்று பாஜகவில் இணைந்தார். அதோடு, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை, பாஜகவில் இணைத்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த நவம்பர் 2ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். பஞ்சாபின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post