சிங்கார கவுரி அம்மன் வழிபாட்டு வழக்கை விசாரிக்கலாம் | கியான்வாபி மசூதி மனு தள்ளுபடி - நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் https://ift.tt/3vlsqQb

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் வழிபாடு தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தலாம். இந்த வழக்கு மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வராது என்று தெரிவித்துள்ள வாரணாசி நீதிமன்றம், கியான்வாபி மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து, அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி வளாக சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை கோயிலின் பக்கமாக அமைந்துள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post